குறையும் சர்க்கரை உறுதியாய்!!

Posted by aranthairaja

வெண்டைக்காய் !
குறையும் சர்க்கரை உறுதியாய்!!



நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள்.



               தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி தினமணி மருத்துவமலர் ( 2001) கூறிய சில கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்.

             மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.


             சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித் துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது. சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால் உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை செய்யும்.ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல் எடை இயல்பான அளவுக்குக் குறையும், இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால் (எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்)
அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும், நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும். மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.


              உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக் கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன் 5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள்.

              தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள். நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போதுவாகனங்களைச் சிறிது தொலைவிலே நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்       :       
             தாழ் சர்க்கரை நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள்
கடைப் பிடிக்கவேண்டியவை:

              கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிடுங்கள்.
இவ்வாறு அம்மலர் கூறுகிறது.

இனி, வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன்.

               தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில் வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள் எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும் கொடுத்தால் பெரும் தொண்டு! 

            தேவைப் பட்டவர்கள் கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு என்று எழுதியிருந்தார். அதை நான் இங்கு தருகிறேன். நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு சொல்லலாம்.



// ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.)

எதற்கு இது? 
             இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர் புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன்
அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.

               இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ் பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில் வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில் மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை தெரியுமா? இதோ:  தன் சர்க்கரை லெவல் இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம் எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின் பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன் தெரிவித்துள்ளார். தினம் ஒரு வெண்டைக்காய் தானே செலவு.

திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது:

               நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான். 190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ, கீழோ இருந்து வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும்
              நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல் இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில் குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின் இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன
ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால்
அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும் எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம். உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான்.

               ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால் மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன். இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித்திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள்.

              பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த் தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர்
குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.

               இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி வரவேண்டும்? எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.

             மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம். அந்த ரிபோர்ட்டைத் தகுந்த டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத் தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.

நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன், 
எழுத்தாளர் திரு.ரா.கி. ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in)
அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும்
ஏப்ரல் 26-மே2,2009.//

நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.

வாழ்க நலமுடன்.                                           வாழ்க வளமுடன்

5 comments:

  1. MANO நாஞ்சில் மனோ said...

    செலவில்லாத மருத்துவம் அருமையா இருக்கே!!!!!! இருங்க நண்பர்களுக்கு சொல்லி கொடுக்குறேன்....

  2. MANO நாஞ்சில் மனோ said...

    நானும் உங்கள் பாலோவர் ஆகிட்டேன்....

  3. aranthairaja said...

    நன்றிகள் மனோ சார்.

  4. Chitra said...

    விரிவான விளக்க கட்டுரை. என் ப்லாக் போஸ்ட் வாசித்து, பின்னூட்டம் தந்தற்கு நன்றி. அதை பார்த்துதான் வந்தேன். உங்கள் ப்லாக் இப்பொழுது follow பண்றேன். :-)

  5. aranthairaja said...

    நன்றி திருமதி சித்ரா அவர்களே...

Post a Comment