உலககோப்பை கிரிகெட் இறுதிபோட்டி இன்னும் சற்றுநேரத்தில் . . .

Posted by aranthairaja


உலகோப்பை கிரிகெட் இறுதிபோட்டி இன்னும் சற்றுநேரத்தில் . . .


         இந்தியாவை தோற்கடிப்போம் என்று   இலங்கை கிரிகெட் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலஸ் உறுதியுடன் கூறியுள்ளார். இதுவரை நடந்த உலககோப்பை போட்டியில் இறுதிபோட்டிக்கு இந்தியா மூன்று முறையும் இலங்கை மூன்று முறையும் பங்கேற்றுள்ளது. இரண்டு நாடுகளும் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளது.  இப்போட்டியில் வென்றால் அவ்வெற்றியை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு சமர்பிப்பதாக இலங்கையும், சச்சினுக்கு சமர்பிப்பதாக இந்தியாவும் கூறியுள்ளது.


         இப்போட்டிக்காக இரு அணிகளும் மிக கடுமையாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய தரப்பில் ஆசிஷ் நெகராவிற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வினும், இலங்கை அணியில் மேதிவ்ஸ் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


          தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டிக்கு  மும்பையில் வரலாறு காணாத எட்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானத்திற்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறக்கும் விமானத்தை சுட்டுத்தள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளே தண்ணீர் பாட்டில்களோ  குளிர்பான பாட்டில்களோ  கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான பாதுகாப்பு பணிகளை மகாராஷ்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில் முன்னிற்று பார்வையிடுகிறார்.

நேரடி ஒளிபரப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்......

1 comments:

  1. aranthairaja said...

    இந்தியா வென்று விட்டது என்பதை கேட்கும்போதே மனம் ஆனந்தம் அடைந்து விடுகிறது நம்மை அறியாமலேயே...

Post a Comment