தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை 21 -ம் தேதி 2653 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான விளம்பரம் வெளியிட்டது. ஆகஸ்ட் 20 -ம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 2653 காலியிடத்திற்கு உத்தேசமாக 11 இலட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அந்த காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் 831 இடங்கள் அதிகரித்துள்ளன என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் ஏற்கனவே இப்பதவியின் தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் இப்பொழுது விண்ணப்பிக்க அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. வருகின்ற 28-12-2010 அன்றுவரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை என்றும் இச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தகுதிகள் ஏதும் மாற்றப்படவில்லை. அதற்கான விவரங்கள் தேவைப்படுபவர்கள் இங்கே click செய்யவும் அல்லது www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று Recruitment என்ற பட்டனை தேர்வு செய்து இயக்கவும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கான விவரங்களே இப்போது விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ
முன்பே விண்ணப்பித்தவர்களுக்கு
ஒரு நிம்மதி. அப்பாடா இப்பவாவது தேர்வு தேதிய சொன்னாங்களே...
விண்ணப்பிக்காதவர்களுக்கு
மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு...
அரசுக்கு மீண்டும் ஒரு வருமான வாய்ப்பு.......................................................................
.
.
செய்தி உபயோகமாக இருந்தால் ஓட்டளித்து செல்லவும். குறை இருந்தால் commands ல் தெரிவிக்கவும். வாழ்த்துக்களுடன் ராஜ்...
Subscribe to:
Post Comments (Atom)
வித்தியாசமான சேவை தொடர வாழ்த்துக்கள் ...